Sunday, November 14, 2021

மருதூர் ஜமால்தீன்

 

வக்காத்துக்குளத்துக்கு ஒரு வாழ்த்து 

மருதூர் ஜமால்தீன்


வக்காத்துக் குளம்

வளரும் தலைமுறைகள்

மிக்கோர் கிராமத்துள்

மகிழ்ந்திடும் ஆவணங்கள்


முன்னோர் வாழ்வும்

முழுமைக் கிராமமும்

பின்னோர் அறிந்திடப்

பிரசவித்த குறுநாவல்


கட்டிடக் கலைகலைகள்

கண்பறித்து நின்றாலும்

தொட்டுணரக் கிடைத்தோர்

தொலைக்காத கிராமங்கள்


தீராத் தாகத்துடன்

தொடர்ந்தழைத்து

ஆராத்தியெடுக்கவைக்கும்

அழியாத மண்வளச்சொல்


தீரர் படைத்தளித்துத்

தந்திட்ட நாவல்கள்

சோரம் போகாத

சமுதாயச் சிந்தனைகள்


படிப்போம் பகிர்வோம்

படித்திடத் தூண்டிடுவோம்

நடிக்கும் உலகை

நாமதற்குள் கண்டிடலாம்


மேலும் வெளிவரட்டும்

வாழ்த்துவோம்0

0

தீராக் கதைசொல்லி

வல்லமை தாராயோ, வெள்ளிவிரல், தீரதம் ஆகிய சிறுகதை தொகுதிகளையும், நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, ஆகிய நாவல்களையும் தந்த ஆர்.எம்.நௌஷாத் எழுதிய வக்காத்துக்குளம் கிடைக்கப் பெற்றேன்...

நம் மண்ணின் ஒரு 'தீராக் கதைசொல்லி' தீரனுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்

No comments:

Post a Comment