வக்காத்துக்குளத்துக்கு ஒரு வாழ்த்து
மருதூர் ஜமால்தீன்
வக்காத்துக் குளம்
வளரும் தலைமுறைகள்
மிக்கோர் கிராமத்துள்
மகிழ்ந்திடும் ஆவணங்கள்
முன்னோர் வாழ்வும்
முழுமைக் கிராமமும்
பின்னோர் அறிந்திடப்
பிரசவித்த குறுநாவல்
கட்டிடக் கலைகலைகள்
கண்பறித்து நின்றாலும்
தொட்டுணரக் கிடைத்தோர்
தொலைக்காத கிராமங்கள்
தீராத் தாகத்துடன்
தொடர்ந்தழைத்து
ஆராத்தியெடுக்கவைக்கும்
அழியாத மண்வளச்சொல்
தீரர் படைத்தளித்துத்
தந்திட்ட நாவல்கள்
சோரம் போகாத
சமுதாயச் சிந்தனைகள்
படிப்போம் பகிர்வோம்
படித்திடத் தூண்டிடுவோம்
நடிக்கும் உலகை
நாமதற்குள் கண்டிடலாம்
மேலும் வெளிவரட்டும்
வாழ்த்துவோம்0
0
தீராக் கதைசொல்லி
வல்லமை தாராயோ, வெள்ளிவிரல், தீரதம் ஆகிய சிறுகதை தொகுதிகளையும், நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, ஆகிய நாவல்களையும் தந்த ஆர்.எம்.நௌஷாத் எழுதிய வக்காத்துக்குளம் கிடைக்கப் பெற்றேன்...
நம் மண்ணின் ஒரு 'தீராக் கதைசொல்லி' தீரனுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்
No comments:
Post a Comment