Tuesday, November 16, 2021
வியூகம் TV
வக்காத்துக்குளம் வெளியீட்டுவிழா...
நேரலை..வியூகம் TV
https://www.facebook.com/VIYUHAM/videos/895220231433378/
Sunday, November 14, 2021
மருதூர் ஜமால்தீன்
வக்காத்துக்குளத்துக்கு ஒரு வாழ்த்து
மருதூர் ஜமால்தீன்
வக்காத்துக் குளம்
வளரும் தலைமுறைகள்
மிக்கோர் கிராமத்துள்
மகிழ்ந்திடும் ஆவணங்கள்
முன்னோர் வாழ்வும்
முழுமைக் கிராமமும்
பின்னோர் அறிந்திடப்
பிரசவித்த குறுநாவல்
கட்டிடக் கலைகலைகள்
கண்பறித்து நின்றாலும்
தொட்டுணரக் கிடைத்தோர்
தொலைக்காத கிராமங்கள்
தீராத் தாகத்துடன்
தொடர்ந்தழைத்து
ஆராத்தியெடுக்கவைக்கும்
அழியாத மண்வளச்சொல்
தீரர் படைத்தளித்துத்
தந்திட்ட நாவல்கள்
சோரம் போகாத
சமுதாயச் சிந்தனைகள்
படிப்போம் பகிர்வோம்
படித்திடத் தூண்டிடுவோம்
நடிக்கும் உலகை
நாமதற்குள் கண்டிடலாம்
மேலும் வெளிவரட்டும்
வாழ்த்துவோம்0
0
தீராக் கதைசொல்லி
வல்லமை தாராயோ, வெள்ளிவிரல், தீரதம் ஆகிய சிறுகதை தொகுதிகளையும், நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, ஆகிய நாவல்களையும் தந்த ஆர்.எம்.நௌஷாத் எழுதிய வக்காத்துக்குளம் கிடைக்கப் பெற்றேன்...
நம் மண்ணின் ஒரு 'தீராக் கதைசொல்லி' தீரனுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்
கவிஞர் கதிர்
வக்காத்துக்குளம்...தன்னையே ஓவியமாக வரைந்து முடித்த தூரிகை
கவிஞர் கதீர்
0
கதைஞன்,கவிஞன் ஆர் எம் நௌஸாத் அவர்களின் புதிய படைப்பு "வக்காத்துக் குளம்"
தன்னையே ஓவியமாக வரைந்து முடித்த தூரிகை கொண்டு தன்னை மறைத்தல் என்பது கதையின் உச்சம்.
1986 களில் வக்காத்துக் குளம் எனக்கும் பரிச்சையமாகிய ஓரிடம்.
ஒளி பட்டுத் தெறிக்கும் நாலைந்து வண்ணான் கற்கள்
குளத்தில் ஊறப் போட்டிருக்கும் சாக்குகளை வெட்டி அதனுள் இருக்கும் முளை நெல்லை குடிக்கத் திரியும் ஆமைக் கூட்டங்கள், கொக்குகள், பசும் சமவெளி
குளத்தில் லயித்துக் கிடக்கிறேன்.
-கதீர்-
கவிஞர். ஜமீல்
இப்போது கஸல் பதிப்பகத்தின் வெளியீடுகளை நண்பர்கள் என்னிடம் பெற்றுக் கொள்ள முடியும்
வக்காத்துக் குளம் குறு நாவல்
இலங்கை விலை 200 ரூபா
வெள்ளாவி நாவல்
இலங்கை விலை 500 ரூபா
தொடர்புகளுக்கு
ஜமீல்
0779689392
ஹனீஸ் முஹமட்
வக்காத்துக் குளமும், என் முதல் இலக்கிய பேச்சும்.
ஹனீஸ் முஹமட்
நம்மளையும் மதித்து முதல் தடவையாக பேச கூப்பிட்டாங்களே என்று குறுகிய காலத்தில் தாயார்செய்து தெத்தி, தாவி, தவண்டு போகும்போது இன்னொராளையும் கையில் பிடித்து கூட்டிட்டு போங்க என்று சொன்னால் எப்படி இருக்கும். அது போல,
முதற்தடவையாக பேசும்போது இறுதியில் பேசுவதே பெரிய விடயம், முன்னால் பேசியவர்கள் எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள்.
அதுக்குள்ள ஒரு இடவு எடுத்து,
அதையும் தாண்டி பேச ஆரம்பித்தால்
Mic கழன்று விழுந்தது, சரி என விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தால் அதான் சொல்ல தொடங்கியது. அது முடிந்ததும் பேச ஆரம்பித்தால் Mic வேலை செய்யவில்லை,
அதைச் சரி செய்து பேசிட்டு இருக்கும் போது குறைந்தது ஐந்து தடவையாவது Mic குடைசாய்ந்து விழுந்தது.
என்னடா கொடுமை சரவணா இது, நமக்கு வந்த சோதனை. நானே இடறி இடறி விழுந்து பேசுகிறேன் இந்த Mic எண்ணெயை வாளி வாளியாக ஊத்துகிறதே என்ற பதட்டத்துடன் எழுதிய குறிப்புக்களின் ஒரு பகுதியை விட்டுவிட்டு எப்படியோ பேசி முடிந்தால் போதுமென்று ஒரு வழியா முடிச்சிட்டு ஓடி வந்துட்டேன்.
நீண்ட காலத்திற்கு பின் நல்லதொரு மொட்டைமாடி ஒன்றுகூடல்.
எழுத்தாளர் றஷாக் அவர்களின் வக்காத்துக்குளம் பற்றிய அபரீதமான பார்வையும் பேச்சும்.
Moosa Vijily யின் குரல் கம்பிரம்.
குளு குளு என்று வீசிய தென்றல் காற்றும் நல்லதொரு மனநிலையை தந்தது.
என்ன நானும் Mic உம் நிகழ்வை சொதப்பி விட்டமோ என்று மனம் வருடுகிறது.
நேரடி நிகழ்வின் பதிவுசெய்யப்பட்ட காட்சியின் இணைய முகவரி பின்னூட்டத்தில் இருக்கிறது.
வக்காத்துக்குளம் குறும் நாவலை Fathima Book Centre இல் பெற்றுக்கொள்ளலாம்.
Friday, November 12, 2021
Thursday, November 11, 2021
புகைப்படங்கள்
மருதநிலா நியாஸ்